சம்மாந்துறையில் வீட்டின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த சந்தேகநபர் கைது

சம்மாந்துறையில் வீட்டின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த சந்தேகநபர் கைது-Cannabis-Kanja at Home Garden-Supect Arrested

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள  மலையடிக்கிராமத்தில், வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கஞ்சா செடிகளுடன் இன்று வியாழக்கிழமை (17) குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறையில் வீட்டின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த சந்தேகநபர் கைது-Cannabis-Kanja at Home Garden-Supect Arrested

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்சாடிகளுடன் பூச்சாடிகள் வளர்ப்பது போல கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார்.

இதன்போது, இரண்டு கஞ்சா செடிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் 33 வயதுடைய வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(சம்மாந்துறை நிருபர் - ஐ.எல்.எம். நாஸிம்)


Add new comment

Or log in with...