Friday, February 25, 2022 - 11:54pm
இன்று நள்ளிரவு (26) முதல் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளை அதிகரிப்பதாக, லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய டீசல் விலை லீற்றருக்கு 15 ரூபாவாலும் பெற்றோலின் விலை வீற்றிருக்கு 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த பெப்ரவரி 07ஆம் திகதி முதல் லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
- பெற்றோல் 92: ரூ. 177 இலிருந்து ரூ. 184 (ரூ. 7 இனால்)
- ஒட்டோ டீசல்: ரூ. 121 இலிருந்து 124 (ரூ. 3 இனால்) அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய தற்போதைய புதிய விலை வருமாறு
- பெற்றோல் 92: ரூ. 204
- ஒட்டோ டீசல்: ரூ. 139
Add new comment