கேரதீவில் மிதிவெடி மீட்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேரதீவுப் பகுதியில் உள்ள அரச காணியிலிருந்து இன்று (31) காலை மண்ணில் புதையுண்ட நிலையில் வெடிக்காத மிதிவெடி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
 
இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கையின் போது குறித்த மிதிவெடி இனங்காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
(சாவகச்சேரி விசேட நிருபர்)
 

Add new comment

Or log in with...