Tuesday, January 25, 2022 - 7:38pm
பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்த்யா எக்னலிகொட இன்று (25) கொழும்பு மோதறை (முகத்துவாரம்) காளி கோவிலில் சடங்கொன்றில் ஈடுபட்டிருந்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்கள் (2010.01.24) நிறைவடைந்ததை முன்னிட்டு இவ்வாறு சடங்கொன்றில் ஈடுபட்ட அவர், பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
கடவுளின் முன் தனது கணவனுக்கு நீதி கேட்டு அவர் தனது தலைமுடியை முழுவதுமாக நீக்கி மொட்டையடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பூஜையின் நிறைவில், எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் காரணமானவர்களை தண்டிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்.
Add new comment