இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு
12வயதுக்கும் 19வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த பத்து தினங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் ஒட்சிசன் தேவைப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை ஒரு எச்சரிக்கை நிலையாக எடுத்துக் கொண்டு பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் பூரண ஒத்துழைப்பு சுகாதாரத் துறையினருக்கு அவசியம் என தெரிவித்துள்ள அமைச்சர், எச்சரிக்கை நிலையை கவனத்திற் கொண்டு அனைவரும் செயல்படுவது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment