சீனாவிடமிருந்து அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள்

சீனாவிடமிருந்து அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலங்கை மற்றும் சீன அரசாங்கங்கள் மத்தியில்  இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும்

அதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சலுகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடிய அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

நாட்டிற்கு தற்போது முக்கியமாகத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை இனங்கண்டு அதனை சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...