பாடசாலையொன்றில் 3 ஆசிரியர்கள், 8 மாணவர்களுக்கு கொவிட் தொற்று

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் 8 மாணவர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக தொற்றாளர்கள் கல்வி கற்ற 10 ஆம், 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக்குரிய மாணவர்கள் கல்வி கற்ற வகுப்புகளுக்கு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். இன்று  63 ஆசிரியர்கள்,  150 மாணவர்கள் வரை பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாக அவர் கூறினார்.

இவர்களில் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பை பேணிய 500 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(ஹட்டன் சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...