Sakurai விமான சேவை அதிகாரிகள் இருவர் CCDயினால் கைது

Sakurai விமான சேவை அதிகாரிகள் இருவர் CCDயினால் கைது-Sakurai Aviation-Managing Director & Chief Engineer Arrested by CCD

அண்மையில் கட்டுநாயக்க, கிம்புலபிட்டிய பகுதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பத்தில் 2 விமானிகள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் காயமடைந்தமை தொடர்பில் Sakurai Aviation நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதான பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, குற்றவியல் அலட்சியம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் (CCD) இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த டிசம்பர் 22ஆம் திகதி பயாகலையில் இடம்பெற்ற குறித்த விமான சேவைக்குச் சொந்தமான இலகுரக விமானம் களுத்துறை கடற்கரையில் அவசர தரையிறக்கத்தை மேற்கொண்டிருந்தது.

குறித்த சம்பவங்களைத் தொடர்ந்து விசாரணைகள் நிறைவடையும் வரை, Sakurai உள்ளூர் விமான சேவை நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

UPDATE

PDF File: 

Add new comment

Or log in with...