ரி20 உலகக் கிண்ண முதற் சுற்று போட்டிகளின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 12 அணிகள் விளையாடும் அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளது.
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நேற்று (20) இடம்பெற்ற ரி20 போட்டியில், 70 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு இவ்வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் கொண்ட A குழுவில் தெரிவாகும் இரு அணிகளில் ஒன்றாக இலங்கை அணி தனது இடத்தை பிடித்துள்ளது.
அபுதாபியில் இடம்பெற்ற நேற்றைய நாணயச் சுழற்சியில் வெற்ற பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.
வணிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 61 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
மஹீஷ் தீக்ஷண 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
SRI LANKA INNINGS (20 OVERS MAXIMUM)
IRELAND INNINGS (TARGET: 172 RUNS FROM 20 OVERS)