- 5 பிரதேச செயலக பிரிவுகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிர தேசங்களிலும் சிவனொளிபாத ம லை அடிவார பகுதிகளிலும் பெய்து வரும் மழை காரணமாக கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது நேற்று (27) காலை 5.2 மீற்றர் வரை களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்திருந்ததாக நீர்ப்பாசன திணைக்கள இரத்தினபுரி மாவட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் வேகங்க குருகங்கை, நிரியலி கங்கை, தெனவக கங்கை ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி காவத்தை, எஹலியகொட, களவான, நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள பல பிரதேசங்களில் நிலச்சரிவு அச்சுறுத்தல் நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் இரத்தினபுரி மாவட்ட காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)