12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவைகொண்ட சிறுவர்களுக்கு செப். 24 முதல் Pfizer தடுப்பூசி

12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவைகொண்ட சிறுவர்களுக்கு செப். 24 முதல் Pfizer தடுப்பூசி-Pfizer Dose for 12 Years & Above With Differently Abled Children

- 14 மில்லியன் Pfizer டோஸ் கொள்வனவுக்கு கோரிக்கை

நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவை கொண்ட 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், Pfizer கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, Pfizer கொவிட்-19  தடுப்பூசியின் 14 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்வதற்கான கோரிக்கையை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளதாக, அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.