நீண்ட நாள் உடல்வலி உபாதைகளை குணப்படுத்தும் மாற்றுமுறை மருத்துவம்

டொக்டர் எச்.எம் ரபீக் வழங்கும் சிகிச்சை   

நீண்ட நாள் உபாதைகளான வலிகளுக்கு குறிப்பாக மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி,முழங்கால் வலி, போன்றவற்றுக்கு சிறந்த சிகிச்சைகளை வழங்கி வருகின்றார் வைத்திய நிபுணர் எச். எம் ரபீக்.

இவர் மாற்று முறை வைத்தியத் துறையில் பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டதுடம் மட்டுமன்றி வெளிநாட்டில் மாற்றுமுறை வைத்தியத்துறையில் விரிவுரையாளராகவும் உள்ளார்.

கதிரொளி மூலம் சில வியாதிகளுக்கு சிகிச்சை மேற்கொள்கின்றார். சீன வைத்திய முறை மூலம் ஆய்வும் செய்கின்றார். இன்று அதிகமானோர் தற்போது முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளாக உடல்வலி ,மூட்டுவலி, முழங்கால் வலி, ஒற்றைத் தலைவலி போன்றன உள்ளதாக வைத்தியர் ரபீக் குறிப்பிட்டார்.

“பலர் மாற்றுமுறை (Alternative medicine) வைத்திய சிகிச்சை முறைமைகளை என்னிடம் பெற்றுள்ளனர். மாற்றுமுறை வைத்தியமானது ஆங்கில வைத்தியத்திலிருந்து வேறுபட்ட ஒரு வைத்தியமாக காணப்படுகின்றது. இதில் பலவகையான துறைகள் காணப்படுகின்றன.அதாவது Acupuncture, Cupping therapy Herbal medicine, Nutrition,Diet, color treatment, detox type of treatment, physiotherapy type of management, Counseling போன்ற பல துறைகள் காணப்படுகின்றன. உடலில் ஏற்படும் வலிகளுக்கு மாற்றுமுறை வைத்திய முறையினால் இவ்வாறான சிகிச்சை முறைகளை பயன் படுத்தி் நோயுற்ற மக்களுக்கு உதவி புரிகின்றோம்” என்றார் அவர்.

தெஹிவளையில் இருக்கும் தனது கிளினிக்கை நவீன உபகரணங்களுடன் நடத்தி வரும் அவர், டயட் (Diet) உணவு முறைகள் பற்றி அறிவுரைகளும் வழங்கி வருகிறார். சிறந்த உள ஆற்றுப்படுத்தல் நிபுணராகவும் அவர் காணப்படுகிறார். இவர் ஐரோப்பிய நாடுகளில் சுமார் 30 வருடங்கள் இருந்து UK, USA, Spain போன்ற நாடுகளில் பட்டம் பெற்றுள்ளார்.

மாற்று முறை சிகிச்சை வழங்கும் வைத்தியர் ரபீக் இங்கிலாந்தில் கல்வி கற்று சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். மாற்று முறை சிசிச்சையில் Counselling, oil treatment, herbal medicine, light treatment Nutrition,Acupuncture, physio type of treatment, Diet and counseling,cupping therapy போன்ற பல மாற்று சிகிச்சை முறைகளும் அவரது சிகிச்சை நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

உடல் நுட்பங்கள் பெரும்பாலும் மனதுடன் இணைக்கப்படுகின்றன. இருப்பினும் எளிய உணவு வகைகளை உட்கொள்வதும் எமது உடலுக்கு மிக அவசியமாகும். பெரும்பாலும் கொழுப்பு எண்ணெய் நிறைந்த உணவுகள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளைக் உட்கொள்வதால்தான் இன்று தொற்றாநோய்கள் அதிகரித்துள்ளன. உணவு மற்றும் மூலிகை அணுகுமுறைகளானவை உடலின் ஊட்டச்சத்து நல்வாழ்வை சமப்படுத்த முயற்சிக்கின்றன.

வெளிப்புற ஆற்றல் சிகிச்சையில் மின்காந்த சிகிச்சை, ரெய்கி மற்றும் உணர்வுகள், புலன்கள், தொடுகை, பார்வை, கேட்டல், வாசனை மற்றும் சுவை ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வழங்கும் என்று சிலர் நம்புகிறார்கள். புலன்களை உள்ளடக்கிய சிகிச்சைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: கலை, நடனம், இசை காட்சிப்படுத்தல் மற்றும் வழிகாட்டப்பட்ட படங்கள்.

பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரால் இவை நடத்தப்படும் போது பெரும்பாலான மாற்று முறை சிகிச்சைகள் பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது என டொக்டர் ரபீக் தெரிவித்தார்.

சில்மியா யூசுப்...


Add new comment

Or log in with...