எழுமாறான PCR சோதனைகள் அதிகரிக்கப்படுவது அவசியம்

இல்லையேல் நிலைமை பாரதூரமாகும் GMOA எச்சரிக்கை

 

சமூகத்தில் திரிபடைந்த வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை அடையாளம் காண எழுமாறான பிசிஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வைரஸ் பரவல் பாரதூரமான அபாயத்தை தோற்றுவிக்குமென்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. 

சுற்றித்திரியும் நபர்களை சுட்டுக்கொல்ல பொலிஸாருக்கும், இராணுவத்துக்கும் அனுமதி வழங்கி நாட்டு மக்களை கதி கலங்க வைத்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுமென அறிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் இதுவரை 13 இலட்சத்து 67 ஆயிரத்து 894 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 ஆயிரத்து 809 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை என்கிற அறிவிப்பை அதிபர் ரோட்ரிகோ துதர்தே வெளியிட்டுள்ளார்‌. தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது:-

என்னை தவறாக எண்ணாதீர்கள். நாட்டில் ஒரு நெருக்கடி நிலவுகிறது. தேசிய அவசர நிலை உள்ளது. எனவே தடுப்பூசியா அல்லது சிறையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லையென்றால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். பின்னர் அரசாங்கம் உங்களுக்கு தடுப்பூசி செலுத்தும். நீங்கள்‌ தடுப்பூசி போட விரும்பவில்லையென்றால் பிலிப்பைன்சை விட்டு வெளியேறுங்கள். இந்தியா அல்லது அமெரிக்கா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் பிலிப்பைன்சில் இருந்தால் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என அவர் கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...