பிர‌தேச‌த்துக்கென‌ இன்னொரு செய‌ல‌க‌ம் கேட்க வருமாறு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு

ஒவ்வொரு இட‌த்துக்கும், ஒவ்வொரு இன‌த்துக்கும் என்று பிர‌தேச‌ செய‌ல‌க‌ங்க‌ளை உருவாக்க‌ முடியாது என‌ முன்னாள் ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ராஜ‌பக்‌ஷ த‌ன்னிட‌ம் க‌டிந்து கொண்ட‌தாக‌ இல‌ங்கை அர‌சாங்க‌ பொது ஊழிய‌ர் தொழிற்ச‌ங்க‌வாதி லோக‌நாத‌ன் கூறியுள்ள‌த‌ன் மூல‌ம் அனுப‌வ‌மிக்க‌ அர‌சிய‌ல்வாதியான‌ ம‌ஹிந்த‌ ராஜ‌பக்‌ஷவுக்கு தெரிந்திருக்கும் இந்த‌ ய‌தார்த்த‌ம் த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு புரிய‌வில்லையா அல்ல‌து வேண்டுமென்றே த‌மிழ், முஸ்லிம் முர‌ண்பாட்டை ஏற்ப‌டுத்துகிறார்க‌ளா என்ப‌தை த‌மிழ் ம‌க்க‌ள் புரிந்து கொள்ள‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி வேண்டிக் கொண்டுள்ள‌து. 

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து, 

க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌லக‌ம் என்ற‌ ஒன்று இதுவ‌ரை உருவாக்க‌ப்ப‌ட‌வில்லை. இப்போது இருப்ப‌து க‌ல்முனை செய‌ல‌கத்தின் கீழ் இய‌ங்கும் உப‌ செய‌ல‌க‌மாகும்.
இத‌னை த‌மிழ் செய‌ல‌க‌ம் என‌ கூறுவ‌து நாட்டின் ச‌ட்ட‌ங்க‌ளுக்கு முர‌ண்ப‌ட்ட‌தாகும். 30 வீத‌ம் த‌மிழ் ம‌க்க‌ள் வாழும் க‌ல்முனையில் த‌மிழ‌ர்க‌ளுக்கென‌ உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் இருப்ப‌து நியாய‌ம் என்றால் 40 வீத‌ம் முஸ்லிம்க‌ள் வாழும் காரைதீவு பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தில் முஸ்லிம்க‌ளுக்கென‌ உப‌ செய‌ல‌க‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ எம‌து க‌ட்சியின் கோரிக்கையும் நியாய‌மான‌தாகும். 

க‌ல்முனை செய‌ல‌க‌ பிர‌ச்சினையை ம‌ஹிந்த‌வின் கால‌த்தில்தான் தீர்க்க‌ முடியும் என‌ தொழிற்ச‌ங்கவாதி கூறியிருப்ப‌து பாராட்டுக்குரிய‌ விட‌ய‌மாகும். இதைத்தான் உல‌மா க‌ட்சி ப‌ல‌ கால‌மாக‌ சொல்கிற‌து. இந்த‌ உண்மை முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளை பெற்று சுக‌ம் அனுப‌விக்கும் முஸ்லிம் க‌ட்சிக‌ளுக்கு புரிய‌வில்லை. 

ம‌ஹிந்த‌ ராஜ‌பக்‌ஷ ஏனைய‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் போன்று பாம்புக்கு த‌லையையும் மீனுக்கு வாலையும் காட்டுப‌வ‌ர் அல்ல‌. முடியுமான‌தை முடியும் என‌ சொல்லும் அர‌சிய‌ல்வாதி. க‌ல்முனை முஸ்லிம்க‌ள் எம‌து க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்தியிருந்தால் எப்போதோ உப‌ செய‌ல‌க‌த்தை ர‌த்து செய்து த‌மிழ் ம‌க்க‌ளுக்கென‌ 1987ம் ஆண்டுக்கு முன்பிருந்த‌ தாள‌வெட்டுவான் முத‌ல் ம‌ருத‌முனை வ‌ரையான‌ க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌த்தைப் பாண்டிருப்பு செய‌ல‌க‌ம் என்ற‌ பெய‌ரில் வ‌ழ‌ங்கியிருப்போம். 

ஆக‌வே க‌ல்முனை செய‌ல‌க‌ம் ப‌ற்றி பேசும் த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கும் தொழிற்ச‌ங்க‌வாதிக‌ளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். வாருங்க‌ள். அனைவ‌ரும் சேர்ந்து பேசி பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌வைக் க‌ண்டு இன‌ம், இட‌ம் என்று இல்லாம‌ல் பிர‌தேச‌த்துக்கென‌ இன்னொரு செய‌ல‌க‌ம் கேட்போம். இப்பிர‌ச்சினையை தீர்ப்போம். இத‌னை நாம் தீர்க்காவிட்டால் த‌மிழ் கூட்ட‌மைப்புக்கும் முஸ்லிம் காங்கிர‌சுக்கும் வாக்கு சேர்க்கும் பிச்சைக்கார‌னின் புண்ணாக‌வே இது இருக்கும். 
 


Add new comment

Or log in with...