கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 11 கோடி ரூபாய் செலவில் கட்டில்கள்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் அரச கைத்தொழில் திணைக்களம் ஆகியன பதினோரு கோடி ரூபா செலவில் கட்டில்களை தயாரித்து வருகின்றன.  

750 கட்டில்கள் தயாரிக்கப்பட உள்ள நிலையில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் மூலம் 250 கட்டில்களும் அரச கைத்தொழில் திணைக்களத்தின் மூலம் 500 கட்டில்களும் தயாரிக்கப்படவுள்ளன. அதற்கிணங்க அரச கைத்தொழில் திணைக்களம் தற்போது 100 கட்டில்களையும் அரச பொறியியல் திணைக்களம் 60 கட்டிகளையும் இதுவரை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

மேற்படி கட்டில்கள் ராஜாங்க அமைச்சர் இண்டிக அனுருத்தவினால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்     


Add new comment

Or log in with...