எதிர்க்கட்சியினரைப் பலப்படுத்தும் எந்த சதிகளுக்கும் சுதந்திரக்கட்சி து​ணை போகாது

- உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையில் தீர்வு

எதிர்க்கட்சியினரை பலப்படுத்தும் எந்தவொரு அரசியல் தீர்மானங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்காதென சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஊடகங்களுக்கு இதுதொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தற்போதைய அரசாங்கத்தைப் பலவீனமடையச் செய்ய எத்தனிக்கும் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும்கூட்டுக்கு அழைக்கின்றனர்.எமது கட்சி இதற்கு ஒரு போதும் துணை போகாது. இந்த அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டுதான் செயற்படுகிறது. ஜனாதிபதியும், பிரதமரும் இணங்கித்தான் செயற்படுகின்றனர். இவர்களின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட அரசாங்கமே தற்பொழுது ஆட்சியிலும் உள்ளது.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என்ற வகையில் அரசாங்கத்தையே பிரதி நிதித்துவபடுத்துகிறோம். இதனால் நாம் ஒரு போதும் இந்த அரசாங்கத்தைக் குழப்புவதற்கு அல்லது தற்போதைய அரசாங்கத்தை மாற்றிமைப்பதற்கு உடன்படப்போவதில்லை. எதிர்க் கட்சியினரைப் பலப்படுத்துவதற்கு எடுக்கப்படும் எந்தச் சூழ்ச்சிகளுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைக்காது.

எமது கட்சிக்காரர்களுக்கும், எமது கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் பிச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை நாம் அரசாங்கத்திற்குள்பேசித்தீர்ப்போம். ஜனாதிபதியும், பிரதமரும் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எமது அமைப்பாளர்களுக்கு மக்கள் முன் சென்று தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கென அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளன. இவற்றினை அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சியின் அமைச்சர்களினூடாக முன்னெடுக்க முடியும். தற்பொழுது நாம் இவ்வாறான ஒரு சில திட்டங்களை தயாரித்துள்ளோம். இவற்றிற்கு தேவையான நிதி யினை பெற்றுத் தருவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ வாக்குறுதியளித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாகவே அரசியலை ஆரம்பித்தனர்.

இதனால் இவர்களது உள்ளங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான கௌரவமும் மதிப்பும் இருகவே செய்யும் என்றார்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...