கொளத்தூரில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி

திமுக 133

அ.தி.மு.க 66

காங்கிரஸ் 18

விசிக தலா 4

இடதுசாரி தலா 2

ப.ம.க 5

ப.ஜ.க. 4

இந்திய கம்யூனிஸ்ட் 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 இடங்களையும் பெற்ற நிலையில் 133 இடங்களைப் பெற்றுள்ளது. இந்த வகையில் திமுக கூட்டணி 159 இடங்களைப் பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக் கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கொளத்தூரில் 2,81,128 வாக்குகள் உள்ளன. இதில் பதிவான வாக்குகள் 1,71,607. இதில் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), -1,05,794 வாக்குகளும் ஆதிராஜாராம் (அ.தி.மு.க.), -35,214 வாக்குகளும் ஜெ.ஆறுமுகம் (அ.ம.மு.க.), -1,082 வாக்குகளும் ஏ.ஜெகதீஷ்குமார் (ம.நீ.ம.), -14,234 வாக்குகளும் பெ.கெமில்ஸ் செல்வா (நாம் தமிழர்) -11,320 வாக்குகளும் ஜமால் முகமது மீரா (பகுஜன் சமாஜ்) -1,295 வாக்குகளும் ஜி.வேல்முருகன் (சிவசேனா) -39 வாக்குகளும் பெற்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்றுக் காலையில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக எம்.எல். ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுப்பார்கள்.

அதன் பின் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடித்தை வழங்குகிறார்.

அப்போது எந்த திகதியில் பதவி ஏற்பது என்ற விவரம் வெளியிடப்படும். அனேகமாக எதிர்வரும் 7-ந் திகதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறும் என தெரிகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

அண்ணா அறிவாலயமும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதேபோல பல்வேறு அரசியல் தலைவர்கள் வருகையால் அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக, முத்தரசன் தெரிவித்தார்.

முக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். அண்ணா அறிவாலயம் வந்து, முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய வெற்றியை தேடித் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

கமல் தோல்வி

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கோவை தெற்கு தொகுதியில், தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இறுதியில், 1,728 வாக்குகள் வித்தியாசத்தில், பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார். அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், கோவில்பட்டி தொகுதியில் இரண்டாமிடத்தில் வந்தார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில், மூன்றாமிடத்தில் நின்றார்.


Add new comment

Or log in with...