கைதிகளை பார்வையிடுவது இரு வாரங்கள் இடைநிறுத்தம்

கைதிகளை பார்வையிடுவது இரு வாரங்கள் இடைநிறுத்தம்-Visiters Not Allowed to Visit Prisoners for 2 Weeks From Apr 24

நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலகளில் கைதிகளை பார்வையிடுவது இரு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (24) முதல் இரு வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலுமுள்ள கைதிகளை பார்வையிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் ஒரு சில இடங்களில் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...