சீரடி பாபா ஆலயத்துக்கு இராஜகோபுரம் அமைப்பு

இன்று அடிக்கல் பிரதிஷ்டை; புஷ்பா பசில் ராஜபக்ஷ பங்கேற்பு

ஸ்ரீ சத்ய சாயி பாபா மகான் சீரடி சாயி பாபா அவதாரங்களின் ஆலயத்தின் 52 ஆவது ஆண்டை முன்னிட்டு கொழும்பு, புதுச்செட்டித் தெருவிலுள்ள சாயி நிலையத்தின், சீரடி ஆலயத்துக்கு இராஜகோபுரம் கட்டப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று காலை 08.00 மணியளவில் சிவாச்சாரியார்கள் சகிதம் நடைபெறும்.

இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷவின் பாரியார் சட்டத்தரணி புஷ்பா ராஜபக்‌ஷவும் கலந்துகொண்டு அடிக்கல் பிரதிஷ்டை செய்வார். 


Add new comment

Or log in with...