- இந்தியாவில் ஆயுதங்களுடன் கைதானவர்களுடன் தொடர்பு என சந்தேகம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், இன்று (17) சனிக்கிழமை அதிகாலை இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஐவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன், புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - கீதன்)
Add new comment