ஆட்ட நிர்ணய சதி; சச்சித்ர சேனாநாயக்கவின் முன் பிணை மனு நிராகரிப்பு

ஆட்ட நிர்ணய சதி; சச்சித்ர சேனாநாயக்கவின் முன் பிணை மனு நிராகரிப்பு-Sachithra Senanayake's anticipatory bail application rejected by Colombo additional magistrate court

கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட, முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தான் கைதாவதை தடுக்கும் முன்பிணை மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, குறித்த மனு இன்றையதினம் (02) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...