புது தில்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக குண்டு வெடிப்பு

புது தில்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக குண்டு வெடிப்பு-Bomb Blast In Front of Israel Embassy In New Delhi-India

இந்திய தலைநகர் புது தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் இன்று (29) பிற்பகல் குண்டொன்று வெடித்துள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த தூதரகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் இதில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இது தொடர்பில் தாம் இஸ்ரேலி வெளிவிவகார அமைச்சர் கெபி அஷ்கெனாஸியுடன் (Gabi Ashkenazi) தொடர்பு கொண்டு பேசியதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதனை தாங்கள் மிக தீவிரமாக கவனத்தில் கொள்வதாக தெரிவித்துள்ள அவர், தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதாக உத்தரவாதமளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதற்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதில் பின்னிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் உள்ளூர் நேரம் 5.00 மணியளவில் நகரின் மையத்தில் உள்ள குறித்த தூதரகத்திற்கு முன்பாக, மிகக் குறைந்த பாதிப்பைக் கொண்ட மேம்பட்ட சாதனமொன்றின் மூலம் குறித்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக, புது தில்லி பொலிசார் தெரிவித்துள்ளனர். 


Add new comment

Or log in with...