நான்கு வருடங்களின் பின் வெளியே வரும் சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் 04 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா நேற்று விடுதலையானார். சிறையிலிருந்து விடுதலையாவதற்கான உத்தரவு மருத்துவமனையில் சசிகலாவிடம் நேற்று வழங்கப்பட்டது.

சிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார். சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனையில் டிடிவி தினகரன், வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் உள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 04 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளனர். கொரோனா வழிகாட்டுதல்படி சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


Add new comment

Or log in with...