கல்முனை வடக்கு, தெற்கு பகுதிகள் 28 நாட்களின் பின் விடுவிப்பு

கல்முனை வடக்கு, தெற்கு பகுதிகள் 28 நாட்களின் பின் விடுவிப்பு-Isolation of Kalmunai North-East Grama Niladhari Divisions Lifted
(படம்: கல்முனை மத்திய தினகரன் நிருபர் - அஷ்ரப் கான்)

கடந்த 28 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்முனையிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று (25) காலை 6.00 மணி முதல் விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 28ஆம் திகதி முதல் கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடி வீடு வீதி வரையான,  கல்முனை வடக்கில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கல்முனை தெற்கில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இன்று (25) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
1. கல்முனை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

  • கல்முனை 1 C
  • கல்முனை 1E
  • கல்முனை 2
  • கல்முனை 2A
  • கல்முனை 2B
  • கல்முனை 3A

2. கல்முனை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

  • கல்முனை 01 (MD)
  • கல்முனைக்குடி 01
  • கல்முனைக்குடி 02
  • கல்முனை 03 (MD)

இன்று (25) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
1. அம்பாந்தோட்டை: அம்பலாந்தோட்டை பிரதேச சபைக்குட்பட்ட இல 140 - போலான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மெல்கொணிய கிராமம்
2. பூஜாபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் (MOH) பல்லியகொட்டுவ, கல்ஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு


Add new comment

Or log in with...