பாராளுமன்ற ஊழியர் நால்வருக்கு கொரோனா தொற்று

பாராளுமன்ற ஊழியர் நால்வருக்கு கொரோனா தொற்று-4 Staff Members of Parliament Tested Positive for COVID19

பாராளுமன்றத்தில் பணி புரியும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தில் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பாராளுமன்றத்தில் இரு கட்டங்களாக கடந்த ஜனவரி 15ஆம் திகதி 16 எம்.பிக்கள் உள்ளிட்ட சிலருக்கும், கடந்த ஜனவரி 13ஆம் திகதி சபாநாயகர் மற்றும் 15 எம்.பிக்கள் உள்ளிட்ட 463 பேருக்கு PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...