- செவ்வாய்க்கிழமையும் பூட்டு
நத்தார் தினமான நாளையயதினம் (25) நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு, கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆயினும் சுற்றுலா அபிவிருத்தி அதிசாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் விசேட மூன்று ஆண்டு அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு, கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் முழுநோன்மதி தினமான இம்மாதம் 29 ஆம் திகதியும், நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கலால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Add new comment