- நாளை அதிகாலை 5.00 மணி முதல் ஒரு சில பகுதிகள் விடுவிப்பு
- சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தல்
- சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் நிலை நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பின் மருதானை, தெமட்டகொடை, மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட சில பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வெள்ளவத்தை மயூரா பிளேஸில் புதிதாக தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகள், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என, ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,
கொழும்பு மாவட்டம்
தொடர்ந்தும் தனிமைப்படுத்தபடும் பொலிஸ் பிரிவுகள்
- மருதானை
- மாளிகாவத்தை
- தெமட்டகொடை
- கிராண்ட்பாஸ்
- மோதறை (முகத்துவாரம்)
- கொட்டாஞ்சேனை
- ஆட்டுப்பட்டித்தெரு
- டாம் வீதி
- வாழைத்தோட்டம்
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
- கொம்பனித்தெரு: வேகந்த
- பொரளை: வனாத்தமுல்ல
- வெல்லம்பிட்டி: சாலமுல்ல
- கொம்பனித்தெரு: ஹுணுப்பிட்டி
- கறுவாத்தோட்டம்: 60ஆவது தோட்டம்
- வெள்ளவத்தை: கோகிலா வீதி
குடியிருப்பு தொகுதிகள்
- வெல்லம்பிட்டி: லக்சந்த செவன
- மட்டக்குளி: ரன்திய உயன, பெர்குசன் வீதி தெற்கு பகுதி
நாளை (14) மு.ப. 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் குடியிருப்பு தொகுதிகள்:
- கிராண்ட்பாஸ்: சிறிசந்த செவன, சிறிமுத்து உயன
- மாளிகாவத்தை : லக்ஹிரு செவன புகையிரத தொடர்மாடி
- பொரளை : சிறிசர உயன
நாளை (14) மு.ப. 5.00 மணி முதல் புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்:
- வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில்: மயூரா பிளேஸ்
கம்பஹா மாவட்டம்
நாளை (14) மு.ப. 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:
வத்தளை பொலிஸ் பிரிவு
- கெரவலப்பிட்டி
- ஹேகித்த
- குருந்துஹேன
- எவரிவத்த
- வெலிகடமுல்ல
பேலியகொடை பொலிஸ் பிரிவு
- பட்டிய வடக்கு
தொடர்ந்தும் தனிமைப்படுத்தபடும் கிராமசேவகர் பிரிவுகள்
பேலியகொட பொலிஸ் பிரிவு
- பேலியகொடவத்தை
- பேலியகொட கங்கபட
- மீகஹவத்த
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு
- வெலேகொட வடக்கு
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
- தல்துவ: MC குடியிருப்புத் தொகுதி
வியாங்கொடை பொலிஸ் பிரிவு
- ஹிரிபிட்டிய தெற்கு: நிதஹஸ் மாவத்தை
நாளை (14) மு.ப. 5.00 மணி முதல் புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்/ கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:
வத்தளை பொலிஸ் பிரிவு
- கெரவலப்பிட்டிய: நைதுவ பிரதேசம்
- வெலிகடமுல்ல : துவே வத்தை பிரதேசம்
பேலியகொட பொலிஸ் பிரிவு
- பட்டியமுல்லை: ரோஹண விகாரை மாவத்தை
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில்
- ஹுணுப்பிட்டி வடக்கு : வெதிகந்த பிரதேசம்
நிட்டம்புவ பொலிஸ் பிரிவில்
- திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கில்: வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி, ஹிஜ்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள்
களுத்துறை மாவட்டம்
நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்/ கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:
- புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவில் வேகன்கல்ல கிழக்கு மற்றும் வேகன்கல்ல மேற்கு
- குடா ஹீனிட்டியன்கல: மரிக்கார் வீதி
Add new comment