யாழ். சாவகச்சேரி, கெருடாவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த குழுவொன்று, அவ்வீட்டிற்கும் அவ்வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது.
4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குறித்த குழுவினர், வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரிப்பர் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன், வீட்டின் முன்பக்க யன்னல் கண்ணாடிகளையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
(சாவகச்சேரி விசேட நிருபர் - தவராஜா சபேசன்)
Add new comment