வயல் காவலில் ஈடுபட்டிருந்தவர் காட்டு யானை தாக்கி பலி

மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள அலியாஓடை எனும் வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (08) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் சந்திவெளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து ஏரம்பமூர்த்தி (44) என்பவரே பலியாகியுள்ளார்.

இவர் வழமைபோன்று வயல் காவலில் ஈடுபட்டிருந்தபோது காட்டுக்குள் இருந்து பிரவேசித்த யானையொன்று இவரைத் தாக்கியுள்ளது.

ஸ்தலத்திலேயே பலியான அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல்)    


Add new comment

Or log in with...