ரூ. 4 கோடி பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது

புத்தளம் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது,  தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
புத்தளம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, புத்தளம் பொலிஸாருடன் இணைந்து நேற்று (26) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சொகுசு மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த தங்கக்கட்டிகள் 4 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைதாக காணப்படுவதுடன், 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது எனவும்,  பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவைகள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக  இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்தனர். 
 
கைது செய்யப்பட்டவர் நாகவில்லு பகுதியைச் சேர்ந்தவரென தெரிவித்த புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(புத்தளம் தினகரன் நிருபர் –மொஹமட் சனூன்) 
 

Add new comment

Or log in with...