பிரான்ஸிலிருந்து 198 பேர் வருகை

- 80 பூட்டானிய இளமானி மாணவர்கள் வருகை

பிரான்ஸில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 198 பேரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று (04) மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் UL 564 எனும் விசேட விமானம், பிரான்ஸின் பரிஸ் நகரிலிருந்து இன்று பிற்பகல் 1.15 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்கும் பூட்டானிய இளமானி மாணவர்கள் 80 பேர், பூட்டானின் பாரோ நகரிலிருந்து இன்று முற்பகல்10.50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


Add new comment

Or log in with...