LPL போட்டிகள் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

LPL போட்டிகள் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு-Lankan Premier League-Postponed Till November

லங்கா பிரீமியர் லீக் ரி20 தொடர் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஓகஸ்ட் 28 முதல் 2020 செப்டம்பர் 20 வரை நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை கருத்தில் கொண்டு, அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...