-பலாத்காரமாக பணம் பெற முயற்சி; கொலை அச்சுறுத்தல் குற்றச்சாட்டு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடம் பலாத்காரமாக ரூபா ஒரு லட்சம் பணத்தை பெற முயற்சி செய்தமை மற்றும் அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 16ஆம் திகதி தலங்கம பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று (11) இரவு 8.40 மணியளவில், கொழும்பு 05, உத்தியான வீதி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து, 43 வயதான மாலக சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை நாளைய தினம் (12) கடுவல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த, தலங்கம பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Add new comment