மாலைதீவிலிருந்து 177 பேர் நாடு திரும்பினர்

மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 177 பேர், மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று (15) பிற்பகல் 3.10 மணிக்கு, மாலைதீவின் மாலி நகரிலிருந்து, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானத்தின் மூலம் இவர்கள் வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டில் சுற்றுலா ஹோட்டல்களில் பணியாற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றிருந்தவர்களாவர்.  

இவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (14) முதல் வெளிநாட்டில் பணி புரிபவர்களை திருப்பி அழைத்து வருவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...