Tuesday, July 14, 2020 - 5:38pm
நடைபெறவிருக்கு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அதன் முதல் கட்டமாக இன்று (14) ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது.
தபால் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
Add new comment