கொரோனா தொற்று போலியான தகவல்கள் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

பொலிஸ் தலைமையகம் எச்சரிக்ைக; யாராக இருந்தாலும் சட்ட நடவடிகை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக பல இடங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

போலியான தகவல்களினால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. 

போலியான தகவல்களை பரப்புபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.

அதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...