துபாயிலிருந்து 298 பேர் வருகை

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 298 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமான இன்று (09) அதிகாலை மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்விமானப் பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்பிற்காக புறப்பட்டுச் சென்றிருந்தவர்களாவர்.

துபாயிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 226 எனும் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 6.05 மணிக்கு மத்தல விமான நிலையத்தை இவ்விமானப் பயணிகள் வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த பயணிகள் அனைவரும் PCR  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...