சுற்றிவளைப்புகளில் 1,885 பேர் கைது

கடந்த 06ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று நள்ளிரவு (07) 12.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,885 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள்,  சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 297 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த 782 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 260 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 163 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 05 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 367 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளில் நாட்டுத் துப்பாக்கி 06 உம், 3,310 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...