Monday, July 6, 2020 - 5:55am
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் பயணத்தின் 50 ஆண்டு நிறைவையொட்டிய முக்கிய நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெறும்.
‘யுத்துகம ஜாதிக சங்விதானய’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று மாலை 3.45 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு ‘உச்சத்தை நோக்கிய மஹிந்தவின் பணிகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சியாமோபாலி மஹா நிக்காயவின் மல்வத்தை பீடத்தின் அநுநாயக்கர் நியங்கொட விஜிதசிறி தேரரின் தலைமையில் நடைபெறும் இந்த பொன் விழா நிகழ்வில் மல்வத்து பீடத்தின் மெதகம தம்மானந்த மஹாநாயக்க தேரோ, யுத்துகம அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க, அதன் தேசிய அமைப்பாளர் அநுப பஸ்குவல் ஆகியோர் உரையாற்றுவர்.
Add new comment