யாழில் 426 கி.கி. கஞ்சா மீட்பு

யாழ். மண்டைதீவுக் கடலில் வீசப்பட்ட நிலையில், 426 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அதனைக் கடத்திச் சென்றவர்கள் கடலில் வீசி விட்டு படகில் தப்பித்துள்ளனர் என, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, படகு ஒன்றிலிருந்து பொதிகள் கடலில் வீசப்படுவதை அவதானித்துள்ளனர்.

அப்படகைச் பின்தொடர்ந்து சென்றபோது, அதில் பயணித்தவர்கள் தப்பித்து விட்டனர். குறித்த பொதிகளை மீட்டு ஆராய்ந்தபோது, அவற்றில் கஞ்சா போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.

(யாழ். விசேட நிருபர் – மயூரப்பிரியன், பருத்தித்துறை விசேட நிருபர் – நிதர்சன் விநோத்)

 


Add new comment

Or log in with...