கங்கை நதிக்கு குறுக்கே மகாத்மா காந்தி பாலம் கட்டுமானப் பணிகளுக்காக சீன நிறுவனங்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை பீகார் அரசு இரத்து செய்துள்ளது.
இது குறித்து பீகார் மாநில சாலைப் போக்குவரத்து அமைச்சர் நந்த் கிஷோர் கூறுகையில், “பாட்னாவில் கங்கை நிதியின் குறுக்கே 5 கி.மீ தொலைவுக்கு பாலம் கட்ட 2900 கோடி ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தோம்.
அந்த இரு நிருவனங்களும் சீனாவின் ‘சைனா ஹார்பர் எஞ்சினியரிங் கம்பெனி, ஷான்க்ஸி ரோட் பிரிட்ஜ் கம்பெனி ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த திட்டத்தை செயற்படுத்த இருந்தன. நாங்கள் இந்த இரு சீன நிறுவனங்கள் இல்லாமல் திட்டத்தை செயற்படுத்த கோரினோம். அதற்கு அந்த இரு நிறுவனங்களும் மறுத்ததால் ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளோம். எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய – சீன எல்லைப்பிரச்சினை காரணமாக இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சீனாவின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Add new comment