மேலும் 3 கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 03 கடற்படையினர், பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இக்கடற்படையினரில் இருவர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் காத்தான்குடி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றனர். அவ்வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, PCR பரிசோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரும் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 826ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, அவர்களை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...