கொவிட்-19 தொற்றினால் மேலும் 4 கடற்படையினர் குணமடைவு

- மேலும் 111 பேர் சிகிச்சையில்

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 04 கடற்படையினர், பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (23) வெளியேறியுள்ளனர்.

அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட PCR  பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, அவர்களது உடலில் கொவிட்-19 வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.

இதன்படி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 790ஆக உயர்வடைந்துள்ளது. 

இக்கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறி வரும் போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கொவிட்-19 தொற்றினால் 901 கடற்படையினர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 790 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111 கடற்படையினர் சிகிச்சை பெற்று வருவதாக, கடற்படையினர் தெரிவித்தனர். 


Add new comment

Or log in with...