அமெரிக்காவிலிருந்து 217 பேர் நாடு திரும்பினர்

இலங்கைக்கு வர முடியாமல், அமெரிக்காவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 217 பேரை ஏற்றிய எமிரேட்ஸ் விமான சேவையின் விசேட விமானமொன்று, இன்று (23) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்விமானப் பயணிகளுக்கு, அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான நேரடி விமான சேவை வசதிகள் இல்லாமையினால், அவர்கள் துபாய் ஊடாக, இலங்கையை வந்தடைந்துள்ளனர். 

அவர்கள் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் EK 2528 எனும் விசேட விமானத்தில், இன்று அதிகாலை 4.47 மணிக்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த பயணிகள், விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...