குழு மோதலில் ஒருவர் பலி

துன்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெபுன்கொட பிரதேசத்தில், கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர். 

நேற்றிரவு (21), குறித்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கெபுன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் துன்கல்பிட்டிய பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


Add new comment

Or log in with...