ஓமந்தையில் 06 கிலோ 16 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துவரன்குளம் பிரதேசத்தில் நேற்று (16) இக்கைது இடம்பெற்றுள்ளது.
செட்டிகுளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஓமந்தை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, கேரள கஞ்சாவை தனது உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஓமந்தையைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (17) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக விரிவான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment