பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் திறப்பு

பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு, முன்பள்ளிகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...