பாகிஸ்தானிலிருந்து 129 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், பாகிஸ்தானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 129 பேர், ஶ்ரீலங்கன் எயார்லன்ஸின் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (15) அதிகாலை வந்தடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.40 மணிக்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1282 எனும் விமானம் மூலம், அவர்கள் லாகூர் மற்றும் கராச்சி நகர்களிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த பயணிகள் குழுவினரும், விமான சேவை பணியாளர்களும் PCR பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதோடு, இப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள 04 ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 


Add new comment

Or log in with...