Friday, June 12, 2020 - 11:51am
பிலிப்பைன்ஸில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 223 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நேற்றிரவு (11) 10.30 மணிக்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்கள், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அதன் முடிவுகள் கிடைக்கும் வரை, விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, ஜப்பானின் நரீட்டா நகரில் சிக்கியிருந்த இலங்கை கடற்படையினர் இருவர் இன்று (12) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
Add new comment