Thursday, June 11, 2020 - 12:58pm
- அடுத்த வருடம் முதல் அமுல்
எதிர்வரும் வருடத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வவுச்சருக்கு பதிலாக, சீருடைத் துணி வழங்குவதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெருமவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக 210 கோடி ரூபா செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் நடைமுறைக்கு அமைய பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
Add new comment